Tuesday, September 05, 2006

பிரிவின் வலி


காற்று வாங்கத்தான்
கடலோரம் நடந்தேன்
இளைப்பார எண்ணித்தான்
ஈர மண்ணை மிதித்தேன்
எடுத்த காலடி
எழும் முன்னே, அலையே
இட்ட அடியை ஏன்
இழுத்து போனாய்

பாதையில் கிடக்கும் ரோஜா
பாதததில் மிதிப்பட்டால்
பாழ்பட்டு கூழாகும் என்று
பக்குவமாய் எடுத்தேன்
ஏன் முள்ளே நீ
என் விரல் கிழித்தாய்

காயபட்ட என் நெஞ்சம், உன்
கண்பட்டே தேறிவரும்போது
கைபட்டால் ஆறிடாதோ என்றே
விடியலில் எழுப்பிட
உன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தேன், சூரிய
வெளிச்சத்தை மட்டுமே நீ
எனக்காக விட்டுப்போனாய்

மறைத்து வைத்த உன் நிணைவுகளை
மறக்கசெய்ய வேண்டும் என
மன்றாடினேன் இறைவனிடம்

பட்டியல் ஒன்று கொடுத்தால்
ப்ரிசீலித்து முடிவெடுப்பதாய் சொன்னார்

முடிந்தவரை எழுதி பார்த்தும்
முடியவில்லை இந்த பட்டியல்
எழுதியதை சரி பார்க்க
ஏட்டை புரட்டியபோது உரைத்தது
உன் நிணைவுகளயும் அகற்றிவிட்டால், நான்
உயிர் வாழ்வதெவ்வாறு

கோடைக்கால பகல்பொழுதில்
கொளுத்தும் சூரியானான உன் பிரிவு, அதை
மறக்க நிணைத்து நான்
மதி இழந்துதான்
தனல் கக்கும் எரிமலைக்குள்
தலை கொடுத்ததுபோல் ஒரு உணர்வு, அய்யகோ
பிரிந்த வலியைவிட உன்னை
மறக்கும் வலி கொடியதடி,ஆதலால்
சிதைந்துபோன பின்னும்
சரித்திரம் சுமக்கும் பாலமாய் , நான்
சுமக்கிறேன் உன நிணைவுகளை

1 comment:

lp said...

very nice one..
nalla iruku..
pictures ellam romba apt choice:)they speak volumes!
keep writing!
lp